Feb 17, 2009

முன்தினம் பார்த்தேனே

ஹாய் மாலினி
அ யாம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகா இருக்க
இங்கே எவனும் இவ்வளவு அழகா ஒரு...ஹா
இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கோலார் தட்டில் உன்னை வைத்து
நிழல் செய்ய பொன்னை வைத்தால்
கோலாரும் தோற்க்காதா பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ....
வருகிறேன்....

ஓ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி...
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி....
விரலால் ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக....
உள்ளமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கடல் நீளம் அங்கு சேரும்
அலை வந்து தீண்டும் துரம்
மனம் சென்று பார்க்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்க்கப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்.... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே....
உயிர் இரண்டும் உறையக்கண்டேன் நெருங்காமலே...
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே....

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

வெண்ணிலா....

வெண்ணிலா....


படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: முன்தினம் பார்த்தேனே
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை


1 comment:

  1. "கோலார் தட்டில் உன்னை வைத்து
    நிழல் செய்ய பொன்னை வைத்தால்
    கோலாரும் தோற்க்காதா பேரழகே..."

    This is wrong...!

    துலா தட்டில் உன்னை வைத்து...
    நிகர் செய்ய பொன்னை வைத்தால்...
    துலா பாரம் தோற்காதோ ஆருயிரே..

    This is right...!

    ReplyDelete