Feb 18, 2009

ஒரு ஊரில் அழகே உருவாய்

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

படம்: காக்க காக்க
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்:
தாமரை

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)


பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)


படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்

Feb 17, 2009

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா

இந்த பாடலை, என் இனிய தோழி அனிதாவிற்கு சமர்பிக்கிறேன்.

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
இயற்றியவர்:
தாமரை

கவிஞர் தாமரையின் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை

"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்" 10 ஆண்டுகளுக்கு முன்பாக கவிஞர் தமாரை தமிழ் இணைய சஞ்சிகையான ஆறாம் திணைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இப்படி தெரிவித்திருந்தார்.

கவிஞர் தமாரை

சூரியாவின் நடிப்பில் தற்போது உலகெங்கும் வெற்றி நடை போடும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் பல பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தாமரை, இன்று தமிழகத்தின் முன்னணி திரை கவிஞர்களில் ஒருவர்.

கவிஞர் தாமரை தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் பொறியாளராகத் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் .

"உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்தின் 'மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே' பாடலின் மூலம் கவிஞர் தாமரை பிரபல்யம் பெற்றுக்கோண்டிருந்த சமயத்தில், ஆறாம் திணை தமிழ் இணைய சஞ்சிகையில் கவிஞர் தாமரையுடனான இப் பேட்டி பிரசுரிக்கப்பட்டது:

கே: திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப: பள்ளிநாட்களிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த செயல் புத்தகங்கள்வாசிப்பது தான். உண்பது, சுவாசிப்பது போல் வாசிப்பதும் ஆகிவிட்டது. அப்புறம் திரைப்படங்கள் பார்ப்பதும், திரைப்பாடல்கள் கேட்பதும் மகிழ்ச்சியான விஷயங்களாக இருந்தன. புத்தக வாசிப்பின் வெளிப்பாடுதான் நான் எழுத்தாளரானது. பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில பாடல்களை நான் மெய்ம்மறந்து ரசித்த போது, '' நான் ரசிப்பது போல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்" என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது.

கே: திரைப் படத்துறை இரும்புக் கோட்டைகள் கொண்டது. உள்ளே நுழைவது கடினம். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிந்து தான் வந்தீர்கள் என்றால் என்ன தைரியத்தில் வந்தீர்கள்?

ப: 'கடினம்' என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

கே:ஆரம்ப நாள்களில் வாய்ப்பு கேட்டு என்னென்ன விதங்களில் முயற்சி செய்தீர்கள்? முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ப: அப்போது திரைத் துறையைப் பற்றி எனக்கு நேரடியாக எதுவும் தெரியாது. பத்திரிகைத் தகவல்கள் தான் நான் அறிந்த திறையுலகம்.சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வாய்ப்புத் தேடி கோவையிலிருந்து முதல் முறையாக சென்னை வந்தேன்.சில பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் முகவரிகள் கையில் இருந்தன.ஒவ்வொருவர் வீடு, அலுவலகமாக சென்று சந்திக்க முயன்றேன். சிலரை சந்திக்கவும் செய்தேன். சொல்லி வைத்தாற் போல் எனக்குக் கிடைத்த பதில் 'பிறகு சொல்லி அனுப்புகிறோம்' என்பது தான்.

ஆனால் அறிமுகம் இல்லாத இந்த சென்னை நகரில் தனியாக ஹோட்டலில் தங்கிக் கொண்டு, ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. சென்னையிலேயே தங்கினாலொழிய வாய்ப்பு கிடைக்காது என்பதை, கோவை-சென்னை பயணக் காட்சி சில முறைகள் நிகழ்ந்த பிறகே நான்அறிந்து கொண்டேன். பொருளாதார சூழ்நிலையும், குடும்பச் சூழ்நிலையும் இதற்கு இடம் கொடுக்காத நிலையில் என் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு ஏமாற்றத்தோடு கோவைக்குத் திரும்பி விட்டேன். அதன் பிறகு இலக்கியத் துறையில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நிறைய எழுதினேன்.இவை நிறைய இலக்கியப் பரிசுகளை பெற்றுத் தந்தன.பத்திரிகை உலகில் என் பெயர் பிரபலமானது. இந்தக் கால கட்டத்தில் தான் நான் வென்ற பரிசுகள் வாங்க அடிக்கடி சென்னை வந்து போனதில் பல அறிமுகங்கள் கிடைத்தன.இப்போது முன்பு போல் சென்னைப் பயணம் மலைப்பாக இல்லை.

ஒரு முறை இசையமைப்பாளர் ஆதித்யனை சந்தித்த பொழுது அவருடைய 'தமிழ் பாப் பாடல்' ஒலி நாடாவிற்கு ஒரு பாடல் ஏழுத வாய்ப்புத் தந்தார். சந்தர்ப்பம் வரும் போது திரைப்படத்தில் எழுத வாய்ப்புத் தருவதாக சொல்லி இருந்தார்.

இந்த சமயத்தில் என் வாசக நண்பர் ஒருவர் நீண்ட நாள்களுக்குப் பிறகு எனக்குக் கடிதம் எழுதி நட்பைப் புதுப்பித்தார். அவரைக் கல்லூரி நாள்களிலிருந்தே கடிதம் மூலம் அறிவேன். என் படைப்புகளை விமர்சனம் செய்து எழுதுவார். அவர் வேலைநிமித்தம் இந்தியாவெங்கும் சுற்றி கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். மனோகர் என்ற அந்த நண்பரை பத்துவருடங்களாக அறிந்திருந்தும் நேரில் சந்தித்ததில்லை. அவர் தன்னுடைய திரைப்பட நண்பரான மோகனை சந்திக்குமாறு சொன்னார். நண்பர் மோகனை நான் சந்தித்த போது அவர் இயக்குநர் சீமானை எனக்கு அறிமுகம் செய்தார். சீமான் என் கவிதைகளைப் படித்து என்னைப் பெயரளவில் அறிந்திருந்தார். அப்போது 'இனியவளே' படம் ஆரம்பித்திருந்த நேரம். ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவதாக ஒரு பாடல் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். மூன்று நாள்கள் கழித்து திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. ''இந்தப் பாடலை நீங்கள் எழுதுங்கள்" என்று திடீரென்று அவர் சொன்னதும் என்னால் நம்பவே முடியவில்லை.

'தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்' என்ற பாடலின் மூலம் இப்படித்தான் அறிமுகமானேன்.

கே:பொதுவாக சினிமாவின் எந்தத் துறையிலும் நுழைவதே கடினமானது. பெண்ணாய் இருந்து நுழைந்ததில் கூடுதல் சிரமம் இருந்ததா?

ப: பெண்ணாக இருப்பதால் உள்ள நடைமுறைப் பிரச்சினைகள் தான் எனக்கும் இருந்தது. பொதுவாக சினிமாவில் சேர வேண்டுமென்றால் ஆண்கள் அடுத்த இரயிலைப் பிடித்து சென்னை வந்து இறங்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை சென்னையிலேயே இருந்து முயற்சி செய்வார்கள். அப்படியெல்லாம் 'ஓடிவர' என்னால் இயலவில்லை. அவகாசம் கிடைக்கிற போதெல்லாம் சென்னை வந்து முயற்சி செய்வதும், திரும்பி செல்வதுமாக இருந்தேன். எனவே தான் என்னுடைய அறிமுகம் தாமதமானது. சென்னையிலேயே இருந்திருந்தேன் என்றால் நான்கு வருடங்களுக்கு முன்பே அறிமுகமாயிருப்பேன்.

கே:உங்கள் வீட்டில் யாரும் உங்கள் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

பொதுவான எதிர்ப்பு இருந்தது. காரணம் அச்சம் தான். கோவையை விட்டு தனித்து எங்கும் சென்று பழக்கமில்லாதவள் நான். சென்னைப் பயணம் என்பதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர்கள் - இரயிலில் என் பெட்டியைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் எனக்கு இமயமலை சிகரத்தைத் தொட்ட களைப்பு ஏற்பட்டு விடும். என்னை சென்னை அழைத்து வரவோ, என்னுடன் தெருத்தெருவாக அலையவோ வீட்டில் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வீட்டில் சிந்தனை சுதந்தரம் உண்டு. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு நண்பர்களின் உதவி பெற்றே என் காரியத்தை சாதித்தேன். ஆக என் பிடிவாதம் தான் என் இன்றைய நிலைக்கு முதல் காரணம்.

கே:திரைப்படப் பாடலாசிரியராக இருக்க விசேஷ பயிற்சிகள் ஏதும் மேற்கொள்கிறீர்களா?

என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுக்கு என் சொந்த வார்த்தைகளைப் போட்டு பாடிப்பார்க்கும் பழக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. அதுதான் நான் செய்த ஒரே பயிற்சி. பின்பு 'எழுச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு சட்டநிறுவனத்திற்காக ஆறு பாடல்கள் எழுதிய அனுபவம் பாடல்பதிவுத் தொழில் நுட்பத்தையும், நடைமுறையையும் அறிந்து கொள்ள உதவி செய்தது. திரு. ஆதித்யனிடம் எழுதிய போது என்னால் உடனுக்குடன் மெட்டுக்கு எழுத முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. அவ்வளவு தான். மற்றபடி விசேஷ பயிற்சி எதுவும் இல்லை.

கே:இங்கிருக்கிற மற்ற பாடலாசிரியர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

ப: பெரும்பாலும் எல்லோரையும் எனக்கு அறிமுகம் உண்டு. 'நல்ல நட்பு' என்று சொல்கிற அளவிற்கு யாரோடும் பழக்கமில்லை. கவிஞர் அறிவுமதியோடு மட்டும் நல்ல தொடர்பு உண்டு. இனிமையான, நல்ல சுபாவமுடைய அவரது நட்பு எனக்கு திரைத்துறையில் காலூன்ற நல்ல ஊக்கம் கொடுத்திருக்கிறது.

உங்கள் பாடலாசிரியர் வாழ்க்கையில் ஒரு முக்கிய சம்பவம்...

பொதுவான நிகழ்ச்சிகள் தாம்! குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த அசாதாரண நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

கே:உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

ப: எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்த பட்ச ஆசை! -லக்கியத் துறையில் என் பெயர் நிலைக்கும்படி நல்ல படைப்புகள் தர வேண்டும். திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்.

ஆனால் என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்க வேண்டும், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதை என் வாழ்நாளுக்குள் பார்க்க வேண்டும். நான் எந்தத் துறையில் இருந்தாலும் என் பயணம் இந்த ஆசையை உள்ளடக்கியதாகத் தான் இருக்கும்.

கணவருக்கு மனைவியாகவும், திரைத்துறைக்கு பாடலாசிரியராகவும் ஒரே நேரத்தில் இருப்பது கடினமாயிற்றே.. எப்படி சமாளிக்கிறீர்கள்...

இப்படியும் சொல்லலாம் தன் குடும்பத்திற்காக கணவன்மார்கள் பல வருடங்கள் வெளிநாடு சென்று பணிபுரிவதில்லையா? அப்போதெல்லாம் மனைவிகள் கேள்வி கேட்காமல் அந்தப் பிரிவினைத் தாங்கிக் கொள்கிறார்களே! ஓர் ஆணிடம், ''ஒரே நேரத்தில் மனைவிக்குக் கணவனாகவும், பணியில் சிறந்த ஊழியராகவும் எப்படி இருக்க முடிகிறது?" என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. வாழ்க்கையில் ஏதாவதொன்று வேண்டுமென்றால் இன்னொன்றை இழக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும். சொந்த ஊர், குடும்பம், நண்பர்கள் - எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து சென்னையில் பாடல் எழுத வேண்டுமென்றால் அது எனக்கு ஒருவிதமான இழப்பு தான். ஆனால என் சிறு வயது கனவு நிறைவேறுகிறதே! 'Professional' பெண்கள் என்றால் கூடுதலாக இந்தச் சிக்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

கவிஞர் தமாரை

கே:உங்களுக்குப் பிடித்த உங்களுடைய ஒரு கவிதை சொல்லுங்களேன்?

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...

சப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும், கடந்த
காலத்தையும், வந்து
அழைத்துப் போய் கலையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப் பாணத்துக் காரியாம்!

இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
''அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..." - தாமரை

அவ என்னை என்னை தேடி வந்தா அஞ்சல | வாரணம் ஆயிரம்

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

அடங்கா குதிரைய போல அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்லை
அந்த சோழி சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க இருக்கே கயித்துல கோர்க்க
ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

வாழ்க்கை ராட்டினம் தான்டா தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதல் நாள் உச்சத்தில் இருந்தேன் நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ

அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் அம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா

தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே

படம் : வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: கார்த்திக், சூர்யா.

முன்தினம் பார்த்தேனே

ஹாய் மாலினி
அ யாம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகா இருக்க
இங்கே எவனும் இவ்வளவு அழகா ஒரு...ஹா
இவ்வளவு அழகா பார்த்திருக்க மாட்டாங்க

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கோலார் தட்டில் உன்னை வைத்து
நிழல் செய்ய பொன்னை வைத்தால்
கோலாரும் தோற்க்காதா பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ....
வருகிறேன்....

ஓ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி...
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி....
விரலால் ஒரு கனவு நூறு விடை சொல்லடி

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக....
உள்ளமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
ஓ மை லவ்
உன்னை நான் பாராமல்
எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...

கடல் நீளம் அங்கு சேரும்
அலை வந்து தீண்டும் துரம்
மனம் சென்று பார்க்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்க்கப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்.... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே....
உயிர் இரண்டும் உறையக்கண்டேன் நெருங்காமலே...
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே....

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக..
நெஞ்சமும் புன்னானதே....
இத்தனை நாளாக...
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா..
ஏக்கத்தில் நான் தேய்வதா...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...

வெண்ணிலா....

வெண்ணிலா....


படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: முன்தினம் பார்த்தேனே
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை


Feb 16, 2009

வசீகரா... என் நெஞ்சினிக்க...

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் (வசீகரா)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே (வசீகரா)


திரைப்படம்: மின்னலே
வெளிவந்த வருடம்: 2000
இயற்றியவர்: தாமரை
பாடகி: பாம்பே ஜெயச்ரி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்